தமிழ் எழுத்து வரிசை குறித்த என் ஆய்வை கீழே எழுதியுள்ளேன். தவறு எதுவும் இருப்பின் சுட்டிக்காட்டவும்.
தமிழ் எழுத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். – (1) உயிரெழுத்துகள் (2) மெய்யெழுத்துகள்
உயிரெழுத்துகள் வரிசைப்படி….
ஒரு குறில் கூடவே அதே ஒலியை நீண்டு ஒலிக்கும் ஒரு நெடில் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (அஆ இஈ உஊ)
கீழ் வரிசையில் தனியாக வரும் ‘ஐ’ மற்றும் ‘ஔ’ நெடில்.
குறில் – குறுகிய நேரத்தில் ஒலிப்பது (மாத்திரை அளவு(கண் இமைக்கும் நேரம்) – 1)
நெடில் – நீண்டு ஒலிப்பது (மாத்திரை அளவு – 2)
மேல் வரிசையில் உள்ள அடிப்படை ஒலிகள் – அ இ உ
கீழ் வரிசையில் உள்ள அடிப்படை ஒலிகள் – எ ஐ ஒ (ஔ)
மேல் வரிசையும் கீழ் வரிசையும் தொடர்புடன் இருப்பதை கவனிக்கலாம்.
ஆங்கிலத்தின் வழியே சொல்ல வேண்டும் என்றால் கீழ் வரிசை எழுத்துக்கள் – ‘a'(எ) ‘i'(ஐ) ‘o'(ஒ)
ஆனால் அதே எழுத்துக்கள் இரண்டு வெவ்வேறு ஒலிகளை இணைக்கும் பொழுது பெரும்பாலும் ‘அ'(a), ‘இ'(i), ‘உ'(oo) என்று ஒலிக்கும்.
தமிழ்முறைப்படியே விளக்கினால் – ‘எ’ என்று சொல்லி அப்படியே உதட்டை அசைக்காமல் ‘அ’ என்று சொல்லிப் பாருங்கள்.
‘ஐ’ என்று சொல்லிவிட்டு அப்படியே உதட்டை அசைக்காமல் ‘இ’ என்று சொல்லிப் பாருங்கள்.
‘ஒ’ என்று சொல்லிவிட்டு அப்படியே உதட்டை அசைக்காமல் ‘உ’ என்று சொல்லிப் பாருங்கள்.
இது மூன்றுமே செய்யக் கூடியவை. ‘ஒ’ என்று சொல்லிவிட்டு அப்படியே உதட்டை அசைக்காமல் ‘அ’ என்று சொல்லிப் பாருங்கள் – முடியாது!
அந்த ‘அ’, ‘இ’, ‘உ’ வரிசைக்கு ஏதாவது காரணம்/கரணியம் இருக்கிறதா?!
இருக்கிறது.
‘அ’ என்பதை ஒலிக்கும் பொழுது வாய் நன்றாக திறந்திருக்கும். – அடிப்படையான ஒலி
‘இ’ என்பதை ஒலிக்கும் பொழுது வாய் ‘திறந்தளவு’ சற்று குறைந்திருக்கும்.
‘உ’ என்பதை ஒலிக்கும் பொழுது வாய் கிட்டத்தட்ட மூடிய நிலையில் இருக்கும்.
மெய்யெழுத்துக்களை உயிர்மெய் நிலையிலே வைத்து பயில்வோம்(ஒலிப்பதற்கு வசதியாக இருக்கும்).
சில மெய்யெழுத்துகள் ‘வலிந்து’ ஒலிக்கும் – வல்லினம்
சில மெய்யெழுத்துகள் ‘மென்மையாக’ ஒலிக்கும் – மெல்லினம்
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஒலிப்பது – இடையினம்
வல்லினம் – க ச ட த ப ற
மெல்லினம் – ங ஞ ண ந ம ன
இடையினம் – ய ர ல வ ழ ள
உயிரெழுத்துகள் எவ்வாறு ஒரு குறில், ஒரு நெடில் என வரிசைப்படுத்தப் பட்டிருக்கிறதோ, அது போல மெய்யெழுத்துகள் ஒரு ‘வல்லினம்’ ஒரு ‘மெல்லினம்’ என வரிசைப்படுத்தப் பட்டிருக்கிறது.
‘ற’, ‘ன’ மட்டும் ஏன் கடைசியில் இருக்கிறது?!
அது மட்டுமல்ல ‘ழ’ மற்றும் ‘ள’வும் கடைசியில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது.
‘க’ – ஒலித்து பாருங்கள் – தொண்டையில் இருந்து வரும்
‘ச’ – பின்வாயில் இருந்து ஒலிக்கும்
‘ட’ – நடு மேல்வாயில் இருந்து ஒலிக்கும்
‘த’ – முன்பக்க மேல்வாயில் இருந்து ஒலிக்கும்
‘ப’ – உதட்டில் இருந்து ஒலிக்கும்
ஒலி ‘தொண்டையில்’ தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னே வந்து உதட்டில் முடிந்திருப்பதை கவனித்திருப்பீர்கள்.
ஆனால், ‘ற’ மீண்டும் உள்ளே போகிறது! (விகாரம்)
இது போலவே ‘ன’ மெல்லினத்தில் ‘விகாரம்’. ‘ழ’ மற்றும் ‘ள’, இடையினத்தில் விகாரங்கள்.
இந்த நாலெழுத்துக்களும் (ழ,ள,ற,ன) ‘தமிழில்’ இடையில் சேர்ந்தவைகள் எனத் தோன்றுகிறது.
‘என்று’ என்பதை ‘எண்டு’ என்று இன்னும் கதைக்கும் இலங்கைத் தமிழர்கள் கூட்டம் ‘ற’, ‘ன’ குறித்தான என் ஐயத்தை இன்னும் வலுப்படுத்துகிறது.
‘எழுத்துக்களை’ வரிசை படுத்தியத்தில் கூட ஒரு ‘இலக்கணம்’ இருக்கிறது தமிழுக்கு. (எனவே, அதற்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து சரியாக உச்சரிக்க முயற்சி செய்யுங்கள்.)
இனி விளையாட்டுகளுக்குள் போவோம்…
பிழை திருத்து:
கீழே உள்ள வரிகளில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கணப் பிழைகள் இருக்கும். வரியின் வடிவும் மாறாமல் பொருளும் சிதையாமல் அவைகளை திருத்தியமைக்கவும்.
* நான் அவன் அல்ல.
* நான்கு பறவைகள் மரத்தில் ஒரு கிளையில் அமர்ந்திருந்தது.
* நான் எவ்வளவு முறை சொன்னாலும் கேட்கமாட்டாயா?!
* அது ஒரு அழகிய மழைக்காலம்.
கண்டுபிடி:
இந்த பழமொழி என்னவென்று கண்டுபிடியங்கள்!
“பொ ல் ல ல் தெ ம் மி ல் லா ன் னு வ ன ன்”
குறுந்தகவல்:
‘உச்சரித்தல்’ என்ற சொல் உருவானது எப்படி?
உயிர்தருவித்தல் > உயிர்தரித்தல் > உயிர்ச்சரித்தல் > உய்ச்சரித்தல் > உச்சரித்தல்
முந்தைய விளையாட்டுகள்:
Mohammed Rafi
ஏப்ரல் 18, 2011
பிணையம், பகவலன், வெயிற்குளிப்பு, திருநங்கை, அறியவொணாமை, குறுந்தகடு
5 எழுத்து – விகடகவி, படறவிடு, அறியாதது, தெரியாதது, புரியாதது, பகையானது, உறவானது, தெளியாதது, ஒளியானது,உலவுவது, குலவுவது,
LikeLike
balaraman
ஏப்ரல் 18, 2011
அருமையான முயற்சி. சரியான பதில்கள்.
/விகடகவி/ – இதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை. 🙂
தமிழோடு விளையாடுவோம் – 2 – இன் பதில்கள் இவை!! 🙂
LikeLike
சரவணன்
ஏப்ரல் 18, 2011
* நான் அவன் அல்ல. -> நான் அவன் அல்லன்.
* நான்கு பறவைகள் மரத்தில் ஒரு கிளையில் அமர்ந்திருந்தது. -> நான்கு பறவைகள் மரத்தில் ஒரு கிளையில் அமர்ந்திருந்தன.
* நான் எவ்வளவு முறை சொன்னாலும் கேட்கமாட்டாயா?! -> * நான் எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டாயா?
* அது ஒரு அழகிய மழைக்காலம். -> அது ஓர் அழகிய மழைக்காலம்.
சரியாக திருத்தம் செய்தேனா ?
LikeLike
balaraman
ஏப்ரல் 18, 2011
சரியான விடைகள்! 🙂
LikeLike
karki
ஏப்ரல் 18, 2011
//* நான் அவன் அல்ல//. நான் அவன் இல்லை
* நான்கு பறவைகள் மரத்தில் ஒரு கிளையில் அமர்ந்திருந்தது// அமர்ந்திருந்தன
* நான் எவ்வளவு முறை சொன்னாலும் கேட்கமாட்டாயா?! // எத்தனை முறை
LikeLike
balaraman
ஏப்ரல் 18, 2011
நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருக்கீங்க.
வருகைக்கு நன்றி தலைவா!! 🙂
LikeLike
ஆயில்யன்
ஏப்ரல் 18, 2011
நான் அவன் அன்று/இல்லை – இதுல எது சரின்னு சொல்லுங்க 🙂
நான்கு பறவைகள் மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்திருந்தன.
நான் எத்தனை முறைச் சொன்னாலும் கேட்கமாட்டாயா?
அது ஓர் அழகிய மழைக்காலம்
LikeLike
balaraman
ஏப்ரல் 18, 2011
இல்லை/அன்று இரண்டுமே சரி என்று தான் நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி! 🙂
LikeLike
ஜில்தண்ணி
ஏப்ரல் 19, 2011
பொ ல் ல ல் தெ ம் மி ல் லா ன் னு வ ன ன் ////////
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
LikeLike
balaraman
ஏப்ரல் 19, 2011
அருமை… சரியான பதில்… வருகைக்கு நன்றி. 🙂
LikeLike
Sudha
ஏப்ரல் 23, 2011
நல்ல முயற்சி.எண்டு என்று பேச்சுவழக்கில் மட்டும் சொல்வார்கள் சிலர் .ஆனால் மேடை பேச்சுகளிலும் “என்று” என்று தான் திருத்தமாக உச்சரிப்பார்கள் . இந்தியத்தமிழர்கள் எப்போது சரியாக உச்சரிப்பார்கள் !!! தமிழுக்கு அழகு தரும் இந்த ல,ள,ழ, ண,ன உச்சரிப்புகளை ? 🙂
LikeLike
balaraman
ஏப்ரல் 25, 2011
தகவலுக்கும் பாராட்டுக்கும் நன்றி… 🙂
// எப்போது சரியாக உச்சரிப்பார்கள் !!! தமிழுக்கு அழகு தரும் இந்த ல,ள,ழ, ண,ன உச்சரிப்புகளை ? //
இதற்கு பதில் என்னிடத்தில் இல்லை! 🙂
LikeLike
surya
மே 11, 2011
good effort.congrats
LikeLike
balaraman
மே 12, 2011
நன்றி. 🙂
LikeLike
தேசிங்
மே 23, 2011
தமிழ் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு முன்னோடியாக வாழ்வார்கள் என்பதற்கு என் கள்ளங்கபடமில்லாத உயரினும் மேலான அன்புத் தோழன் பலராமன் மிகப் பொருத்தம் என்று சொல்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் !
LikeLike
balaraman
மே 23, 2011
நன்றி டா… உன்னுடைய வலைதளத்தை இப்பொழுது தான் முதல் முறையாக பார்கிறேன்! அருமை நண்பா!
LikeLike