9 சொற்களில் 11 வரிக்கவிதை இதுதான்!
விதை புதைந்தாலும் மண்ணில்
சாகாமல் போராடி மீண்டும்
துளிர்விட்டு வெளிவந்து வளரும்!
இதில் 11 வரிகள் எங்கே என்று கேட்பவர்கள் கீழே பார்க்கவும்!
மேலே சொன்னபடி படித்தால் இப்படி வரும்:
விதை புதைந்தாலும் மண்ணில்
சாகாமல் போராடி மீண்டும்
துளிர்விட்டு வெளிவந்து வளரும்!
விதை சாகாமல் துளிர்விட்டு வெளிவந்து
வெளிவந்து போராடி புதைந்தாலும் மண்ணில்
மண்ணில் மீண்டும் வளரும் வெளிவந்து
வெளிவந்து போராடி புதைந்தாலும் விதை!
விதை! சாகாமல் போராடி மீண்டும்
மீண்டும் வளரும் வெளிவந்து துளிர்விட்டு
துளிர்விட்டு சாகாமல் போராடி மீண்டும்
மீண்டும் மண்ணில் புதைந்தாலும் விதை!
பின்குறிப்பு:
முதல் பாகம் விதை(பெயர்ச்சொல்) எப்படி வளர்கிறது என்று சொல்கிறது. இரண்டாம் பாகம் விதை எப்படி வளர்ந்து மீண்டும் விதையாகிறது என்று சொல்கிறது. மூன்றாம் பாகம் விடாமுயற்சியைப் பற்றி சொல்கிறது (இங்கே ‘விதை’ வினைச்சொல்).
கார்க்கி (@iamkarki)
செப்ரெம்பர் 7, 2012
:)))
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
🙂
LikeLike
Kokilah Kanniappan
செப்ரெம்பர் 7, 2012
இவ்வளவு நுணுக்கமாக யோசித்ததற்காகவே உங்களுக்குப் பாராட்டுக்கள் 🙂
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
நன்றிங்க. 🙂
LikeLike
desinghrajan
செப்ரெம்பர் 7, 2012
Good effort !
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
நன்றிடா!
LikeLike
என். சொக்கன்
செப்ரெம்பர் 7, 2012
ஆ! தமிழில் ஒரு டாவின்ஸி கோட் 🙂 பாராட்டுகள் எறுழ்வலியாரே :>
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
நன்றி சொக்கரே. அடுத்த முயற்சி வெண்பா தான்! 🙂
LikeLike
Kanavey
செப்ரெம்பர் 7, 2012
பாராட்டுக்கள்!
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
நன்றி. 🙂
LikeLike
Kannabiran Ravi Shankar (KRS)
செப்ரெம்பர் 7, 2012
டேய் எறுழ்வலி (எ) கவிவலி:))
Sooperu! அருமை!
அடுத்த முயற்சியில், “போராடிப் புதைந்தாலும் விதை” என்பதையே ஈற்றடியாக் கொண்டு எழுதவும்!
—————–
கவிதையில் உள்ள சொற்களை,
வெவ்வேறு இடங்களில் மாற்றிப் போட்டுப் பொருள் கொள்ளும் உத்தியைப்
“பொருள்கோள்” – ன்னு சொல்வாங்க!
* பூட்டுவில் பொருள்கோள் = வில்லைக் கீழ் இருந்து மேலே பூட்டுதல்
அதாச்சும் இறுதிச் சொல்லை, முதல் சொல்லோடு பூட்டுதல்!
* தாப்பிசைப் பொருள்கோள் = தாம்பு (கயிறு) பல இடங்களுக்கும் சென்று காற்றில் ஆடுதல்!
அதாச்சும் ஒரு சொல், கவிதையில் பல இடங்களுக்கும் சென்று ஆடுதல்!
—————–
உன் கவிதை, மிகவும் புதுமையான பொருள்கோள்!
Left Right Top Down ன்னு பல மாதிரிப் பயணிப்பதால்…
“பல்திசைப் பொருள்கோள்” -ன்னு புது எலக்கணம் தான் உருவாக்கணும்:)))
நல்ல முயற்சி!
நற்றமிழ் போல் வாழி!!
LikeLike
Sundar Lakshmanan
செப்ரெம்பர் 7, 2012
நாம் இருவரும் ஒரே போன்ற கருத்தைப் பதிந்துள்ளதை இப்போதுதான் பார்க்கிறேன்.
LikeLike
Kannabiran Ravi Shankar (KRS)
செப்ரெம்பர் 7, 2012
Yessu!:)
உங்க இசைவோடு, சதுர்+அங்கம் தவிர்த்து, தமிழாக்கம் பண்ணீறட்டுமா?:)
சதுரங்கப் பரி பாய்ச்சல் = நாற்கரப் பரி பாய்ச்சல் பொருள்கோள்!:)))
LikeLike
Sundar Lakshmanan
செப்ரெம்பர் 7, 2012
> உங்க இசைவோடு, சதுர்+அங்கம் தவிர்த்து, தமிழாக்கம் பண்ணீறட்டுமா?:)
செய்யலாமே. தமிழ்செய்ய இசைவெதற்கு? 🙂 ஆனால் நாற்கரம் என்றால் quadrilateral ஆயிற்றே? http://ta.wiktionary.org/wiki/quadrilateral
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
நன்றி முருகா. என்னை மாதிரி எளியவனே இப்படிப்பட்ட எளிமையான தமிழ்ச்சொற்கள வச்சு இப்படி விளையாட்டு காட்ட முடியுதுனா அதுதான் தமிழ் மொழியோட சிறப்பு!
LikeLike
Sundar Lakshmanan
செப்ரெம்பர் 7, 2012
ஆற்றுநீர்ப் பொருள்கோள் தெரியும், நிரனிறைப் பொருள்கோள் தெரியும், அளைமறிபாப்புப் பொருள்கோள் தெரியும், ஆனால் இது அருமையான புதுமுயற்சி! சதுரங்கப்பரிபாய்ச்சல் பொருள்கோள் எனலாமோ?
http://ta.wikipedia.org/s/qcv
http://www.tamilvu.org/courses/degree/a021/a0214/html/a0214513.htm
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
நன்றி அண்ணா!
LikeLike
இராதாகிருஷ்ணன்
செப்ரெம்பர் 7, 2012
நன்றாக அறை எடுத்து சிந்தித்துள்ளீர்கள்! 😉
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
உண்மைதான், அறையில் தனியாக அமர்ந்து தான் எழுதினேன். நன்றி. 😀
LikeLike
கிராமத்தான்
செப்ரெம்பர் 7, 2012
விதை புதைந்தாலும் சாகாமல் துளிர்விட்டு
மண்ணில் போராடி வெளிவந்து
மீண்டும் வளரும்!
Superb!
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
நன்றி தம்பி.
LikeLike
கொச்சி தேவதாஸ்
செப்ரெம்பர் 7, 2012
தங்கள் அளவுக்கு கற்பனை வளம் இல்லை என்றாலும் தங்களது சிந்தனை வளம் மெச்சத் தகுந்தது.
வாழ்க வளமுடன்
கொச்சி தேவதாஸ்
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
மிக்க நன்றி.
LikeLike
நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ.
செப்ரெம்பர் 7, 2012
வாழ்த்துக்கள் அய்யா..
LikeLike
balaraman
செப்ரெம்பர் 7, 2012
நன்றி திரு.சோழன்!
LikeLike
இசையாளன் (@Isaiyalan)
செப்ரெம்பர் 8, 2012
Interesting
So you ultimately do codec stuff everywhere…
LikeLike
balaraman
செப்ரெம்பர் 8, 2012
Thanks da. 🙂
//So you ultimately do codec stuff everywhere…// Kind of… 🙂
LikeLike
N.Gowri
பிப்ரவரி 13, 2013
“தமிழ் இனி மெல்லச் சாகும்” என்று சொன்ன மீசைக்காரன் இன்று இருந்திருந்தால் அந்த வரியையே நிச்சயம் மாற்றி இருப்பான். புதுமை, அருமை, மேலும் பாராட்ட என் தமிழ் போதாது.
LikeLike
balaraman
பிப்ரவரி 13, 2013
நன்றிங்க. ஆனால், இந்த ஒரு கவிதையில் தமிழ் பிழைத்துக்கொள்ளுமா என்ன?
LikeLike
durairajv
திசெம்பர் 28, 2013
அட !!! செமயா யோசிச்சிருக்கீங்க சகோ 🙂
LikeLike
balaraman
திசெம்பர் 28, 2013
நன்றி நண்பா… 🙂
LikeLike