பெங்களூர் -> ‘கலைப்பொறியாளர்கள்’-இன் முதல் குறும்படம். நான் இதற்கு கதை, கதையாடல் மற்றும் உரையாடல் எழுதி ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறேன்!!
நாங்கள் குறும்படம் எடுப்பதற்கு ஊக்கம் கொடுத்த பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், டுவிட்டர் நண்பர்கள், பேசுபுக்கு நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! இதுவரை பொறுமையாக (மிகப் பொறுமையாக) காத்திருந்ததற்கும் நன்றி! 🙂
இன்றும் எங்கள் முயற்சிக்கு பின்னூட்டம் அளித்து வரும் உங்களுக்கு என் நன்றிகள்.
பெங்களூர் குறும்படத்திற்கு நாங்கள் வெளியிட்ட தூண்டிப்படம் (Teaser)
தூண்டிப்படத்திற்கு கிடைத்த விமர்சனம்
பெங்களூர் – குறும்படத்தில் இடம்பெற்றவர்கள்
நடிகர்கள்:
சரவண குமார்
தினேசு
தங்கராசு
கார்த்திக்
செய்சங்கர்
அரிகரன்
சரவண ராம் குமார்
பலராமன்
அன்பரசன்
தலைப்பு அசைவூட்டம்:
பலராமன்
பாடல் எழுதி – இசையமைத்து – பாடியவர்:
சாய் சுதர்சன்
ஒளிப்பதிவு – ஒலிப்பதிவு – நிகழ்படம் நெறியமைப்பு:
சரவண ராம் குமார்
பின்னணி ஏழில்:
சாய் சுதர்சன்
பின்னணி குரல் கொடுத்தவர்கள்:
சதீசு குமார்
தங்கராசு
தினேசு
கார்த்திக்
சரவண குமார்
சரவண ராம் குமார்
செய்சங்கர்
பலராமன்
அன்பரசன்
பின்புலத்தில் இருந்துகொண்டு நிறைய உதவி செய்த சாய் சுதர்சனுக்கு ஒரு பெரிய ‘நன்றி’ தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த குறும்படத்திற்கு நான் கதை எழுதி முடித்தவுடன் என் ஆருயிர் நண்பன் பாலமுருகனிடம் தான் காட்டினேன். அவன் கூறிய சில கருத்துகள் எங்களுக்கு உதவியாக இருந்தது. நண்பன் பாலமுருகனுக்கு ஒரு பெரிய நன்றி!
பெங்களூர் குறும்படம்
திரைக்கு பின்னால் நடந்த காட்சிகள் உங்கள் பார்வைக்கு…
பெங்களூர் குறும்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்
இந்த குறும்படத்தில் முதன்மை கதைமாந்தராய்/திரையாளுமையாய் வரும் ‘சரவணா குமார்’ பெங்களூர் குறும்படத்தில் நடித்த அனுபவம் பற்றி எழுதியது இது!
‘பெங்களூர்’ குறும்படத்திற்கு கிடைத்த விமர்சனம்!
‘பெங்களூர்’ குறும்படத்தில் வரும் தலைப்புப்பாடலை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்!
துணுக்கு:
என் வலைப்பதிவுலக நண்பரான ‘சாளரம்’ புகழ் கார்க்கியின் இயக்கத்தில் நான் இரட்டைக் கதைமாந்தர்களாய் நடித்த குறும்படம் – அவன் – இவன்
கூமுட்டை
ஜூன் 7, 2011
சொல்லுவதெல்லாம் “பெங்களூரு” ஆனால் டைட்டிலில் மட்டும் “பெங்களூர்”… உண்மையிலே ஃபிரெஞ்ச் பியர்ட் நல்லாத் தான் இருந்தது…
சாய் சுதர்சனின் குரல் கீச்சுக் குரலாக பாடுவது புரிய மாட்டேங்கிறது…
அடுத்த முயற்சி இன்னும் சிறப்பாக வர வாழ்த்துகள்….
LikeLike
balaraman
ஜூன் 8, 2011
//சொல்லுவதெல்லாம் “பெங்களூரு” ஆனால் டைட்டிலில் மட்டும் “பெங்களூர்”// –
“பெங்களூர்” என்பது “பெங்களூரு”வின் புறப்பெயர் – http://bit.ly/kzYJPh
“பெங்களூரு…” என்று கன்னடத்திலும் பாடி அழகு சேர்த்துள்ளோம். தலைப்பு தமிழில் வைத்துள்ளோம்! 😉
//சாய் சுதர்சனின் குரல் கீச்சுக் குரலாக பாடுவது புரிய மாட்டேங்கிறது…// http://bit.ly/iiYAmU
//அடுத்த முயற்சி இன்னும் சிறப்பாக வர வாழ்த்துகள்….//
நன்றிங்க… 🙂
LikeLike
velu
ஜூன் 7, 2011
romba nallla irukku,its good staart.
LikeLike
balaraman
ஜூன் 8, 2011
மிக்க நன்றி!! 🙂
LikeLike
முரளிகண்ணன்
ஓகஸ்ட் 18, 2011
பலராமன். தமிழில் ”பல” ராமனாக இருக்கிறீர்கள். கலையிலும் பல ராமந்தான் நீங்கள்.
சுவையான வலைப்பதிவு.
தொடர்ந்து அசத்துங்கள்.
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். நன்றி
http://muralikkannan.blogspot.com/2011/08/blog-post_17.html
LikeLike
முரளிகண்ணன்
ஓகஸ்ட் 18, 2011
பலராமன்,
ராஜேஷையும் அழைத்துள்ளேன்.
ஆனால் அவர் பதிவில் மறுமொழி இடும் வசதி இல்லை. எனவே அவர் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பவும். அல்லது அவரிடம் தெரியப்படுத்தி விடவும்
LikeLike
balaraman
ஓகஸ்ட் 18, 2011
பின்னூட்டத்திற்கும் அன்பிற்கும் நன்றி! என் பதிவில் சில கருத்துகள் எழுத வேண்டாம் என்று ஏற்கனவே முடிவு செய்திருக்கிறேன். அதனால், தொடர்பதிவு நான் எழுதப்போவதில்லை, மன்னிக்கவும்!
LikeLike
cpsenthilkumar
செப்ரெம்பர் 3, 2011
எஞ்சாய்ஃபுல்
LikeLike
balaraman
செப்ரெம்பர் 4, 2011
நன்றிங்க!
LikeLike
tskannan (@tskannan1)
ஜனவரி 12, 2012
nanraga irunthathu
LikeLike
balaraman
ஜனவரி 13, 2012
நன்றிங்க.
LikeLike