“செம்மொழியான தமிழ் மொழியாம்!”
சுருக்கச் செய்தி:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.
நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த மாநாட்டில், நேரிணையாக பல அரங்கங்களில் நிகழ்ச்சிகள் அரங்கேறின. தமிழ் இணைய மாநாடும் இதனுள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கவியரங்கம், கலை நிகழ்சிகளும் நடந்தன.
அங்கே தமிழ் தகவல்நுட்ப பொருட்காட்சியில்(Tamil IT Exhibition) ஏராளமான தமிழ் மென்பொருள் குறுந்தகடுகள்(Software CDs) மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்(Tamil Virtual University) படைத்த ஆறு தொகுதிகள் கொண்ட தொழில்நுட்ப சொற்களஞ்சியம் (Six-Volume Technical Glossary) விக்சனரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
தமிழ் விக்கிபீடியா நடத்திய கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டது(மொத்தமாக ரூ.67,500). அது போக ஒரு அரசு ஊழியருக்கும், ஒரு இணைய உருவாக்குனருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இந்திய முதன்மை அதிபர் திரு.பிரத்தீபா பாட்டில் தொடக்கி வைத்த இந்த மாபெரும் மாநாட்டில் தமிழ் மேம்பாட்டிற்காக பல கோடிகள் ஒதுக்கப்படுமென தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி தெரிவித்தார். தமிழ் வழியில் பயிலும் மாணாவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த தமிழ் விழாவை சிறப்பித்த சில பெரியோர்களின் பெயர்கள்…
(யார் பெயரையாவது மறந்திருந்தால் மறுமொழியில் தெரிவிக்கவும்.)
பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி
பேரா. ஆஸ்கோ பார்போலா(Prof.Asko Parpola)
பேரா. ஜியார்ஜ் ஹார்ட்(Prof.George Hart)
பேரா. உள்க்ரைன் நிக்லஸ்(Prof.Ulrike Niklas)
விளையாட்டுகள்:
நிகரொலி சொற்கள்:
* சரியாக கேட்கவில்லையா? தொலைகாட்சியின் ______ (ஒளியை/ஒலியை) கூட்டிவிடுகிறேன்!
* அலுவலகத்தில் ______ (பனி/பணி) நிறைய இருந்தாலே தலை வலி வருகின்றது!
*ஆற்றில் துவைத்தாலும் ______(கரை/கறை) துணியை விட்டு அகலவில்லை!
* அனைவரும் நுகரும் ______(வழியில்/வலியில்/வளியில்) புகை போன்ற மாசுப்பொருள்கள் கலக்கக்கூடாது!
* ஒரு பெண்ணின் _____(மனம்/மணம்) இன்னொரு பெண்ணுக்குத் தான் தெரியும்!
* முட்டாள்தனமான கோபத்துக்கு _____(இறை/இரை) பொறுமை!
ஒரு வரிசை சொற்கள்:
ஒரு மெய்யெழுத்தின் பதிமூன்று(மெய்யெழுத்தையும் சேர்த்து) வேறுபாடுகளை(உயிரெழுத்து புணர்வுகளை) மட்டுமே வைத்து வரும் சொல்லை பட்டியலிடுக!
காட்டாக: குகை (க்), தாத்தா (த்), மாமா (ம்)
(விளையாட்டின் விதியை புரிந்து கொள்வதற்கு தான் இந்த காட்டு. மேலும் உள்ள விதிகளை பார்க்கவும்)
விதிகள்:
*ஓரெழுத்து சொற்கள் எழுதக்கூடாது!
காட்டாக: கோ ,வா ,போ , தா
* பிற மொழி சொற்களை தவிர்க்கவும்!
காட்டாக: லீலை, டாட்
*பேச்சுவழக்கு சொற்களை தவிர்க்கவும்.
காட்டாக: மாமா, தாத்தா, பாப்பா
*ஒரே போன்று ஒலி தந்தாலும் வேறு வரிசையில் இருக்கும் எழுத்து வரக்கூடாது.
காட்டாக: நான், நுனி
மதிப்பீடு:
8 சொற்களுக்கு மேல் – அருமை!
5 – 8 சொற்கள் – நல்ல முயற்சி!
5 சொற்களுக்கு கீழே – தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்!
எத்தனை எழுத்துக்கள்?
தமிழில் துணைக்கால்(‘ஆ’ புணர்வு உயிர்மெய் நெடிலோடு வரும் எழுத்து) எழுத்தின் உருவத்தை நடுவாக/மையமாக கொண்டு தமிழில் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன? அவை யாவை?
ஒரு வரிசையில் ஒரு எழுத்து மட்டும் தான் விடையாக கருதப்பட வேண்டும்!
காட்டாக: ‘க’ என்பது விடை என்றால், ‘கி’,’கூ’ போன்ற எழுத்துக்களை சேர்க்க வேண்டாம்!
முந்தைய விளையாட்டுகள்:
Raja
ஜூலை 22, 2010
நல்ல முயற்சி… ஆனால் செம்மொழி பற்றி எதற்கு முன்னுரை… கொஞ்சம் நீளம்…
LikeLike
balaraman
ஜூலை 22, 2010
நன்றி அண்ணா! நீளத்தை குறைக்க முயற்ச்சிக்கிறேன்!
LikeLike
Buvana
ஜூலை 22, 2010
தித்தித்தது
தூது
தாது
தோது
வேவு
LikeLike
balaraman
ஜூலை 23, 2010
உன் விடைகள் ‘தித்தித்தது’! 🙂
நல்ல முயற்சி… பாராட்டுக்கள்! 🙂
LikeLike
Dhanush
ஜூலை 22, 2010
ஒலியை
பணி
கரை
வழியில்
மனம்
இரை
nice
LikeLike
balaraman
ஜூலை 23, 2010
பாராட்டுக்கு நன்றி நண்பா!
ஆனால், உன் விடைகளில் சில பிழைகள் இருக்கின்றன…
கரை – River Bank, கறை – Dust/அழுக்கு
எனவே, ‘கறை’ என்பதே சரியான விடை.
வழியில் – பாதையில், வளியில் – காற்றில்
எனவே, ‘வளியில்’ என்பது தான் சரியான விடை.
LikeLike
சுந்தர்
ஜூலை 23, 2010
TVU தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்றே அழைக்கப்படுகிறது. ஓர் வரிசை அல்ல, ஒரு வரிசை. உயிரொலிகளுக்கு முன்னால் மட்டும் ஓர் வரும், ஓர் இரவு என்பது போல.
மற்றபடி நல்ல பதிவு.
LikeLike
balaraman
ஜூலை 24, 2010
திருத்தியாச்சு! நன்றி! 🙂
LikeLike
thamil vani
ஓகஸ்ட் 23, 2010
* ஒலியை
* பணி
* கறை
* வளியில்
* மனம்
* இரை
LikeLike
balaraman
ஓகஸ்ட் 23, 2010
அருமை… அனைத்து விடைகளும் சரி…
LikeLike
thamil vani
ஓகஸ்ட் 23, 2010
மிக்க நன்றி, உங்கள் சேவை தொடரட்டும்.
LikeLike
thamil vani
ஓகஸ்ட் 23, 2010
ஒரு வரிசை சொற்கள்:
காக்கி
காக்கா
கொக்கு
தீது
வரவு
வாவி
மொழி
குகை
LikeLike
Balaraman
ஓகஸ்ட் 24, 2010
//வரவு , மொழி//
இவை இரண்டைத் தவிர அனைத்தும் சரி…
//வாவி//
இப்படி ஒரு சொல் இருக்கிறதா?! என்ன பொருள்?
LikeLike
thamil vani
ஓகஸ்ட் 24, 2010
வாவிகள் – ஆறு, நீரூற்று என்றும் சொல்லலாம்.
இவை இலங்கையில் அமைந்துள்ள வாவிகள் திஸ்ஸ வாவி
மட்டக்களப்பு வாவி இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள வாவியாகும்.
அபய வாவி… … அனுராதபுரம்
LikeLike
தமிழ்
ஓகஸ்ட் 29, 2010
* ஒலியை
* பணி
* கறை
* வளியில்
* மனம்
* இரை
தமிழ் இனைய மாநாட்டில் புதிய மென்பொருள் ஒன்றிற்கு தமிழக அரசு விருது கொடுத்து அவர்களை பெருமைபடுத்தி உள்ளது. இதன் மூலம் இணையத்தில் தமிழின் ஆதிக்கம் அதிகமாகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
ஜாதகம் பற்றிய ஒரு புதிய மென்பொருள் ஒன்று வந்துள்ளது அதனால் நல்ல பயன் உள்ளது. நான் அதன் மூலம் பயனடைந்தேன், நீங்களும் பயனடைய அந்த இணையத்தின் முகவரி இணைத்து உள்ளேன். http://www.yourastrology.co.in
LikeLike
கௌதம்
ஏப்ரல் 18, 2011
காகம் என்பது தானே தமிழ்ச்சொல்…. காக்கா என்பது பேச்சு வழக்கு அல்லவா??
தத்து
பூப்பு
LikeLike
balaraman
ஏப்ரல் 18, 2011
நீங்கள் சொல்வது சரிதான். ‘காக்கை’ என்று சொல்லியிருக்கலாம்!!
LikeLike
கௌதம்
ஏப்ரல் 18, 2011
கொக்கி
LikeLike
MaNo
ஜூன் 16, 2013
தத்தை
காக்கை
கொக்கு
தீது
துதி
குகை
தூது
LikeLike
balaraman
ஜூன் 16, 2013
நல்ல முயற்சி!
LikeLike