நான் இசுலாமியனா?
(உங்கள் கடையில் வந்து தினம் ஏதாவது தின்பண்டம் வாங்குவதற்கு இதை நான் சொல்லியே ஆக வேண்டுமா?)
நான் பார்பனனா?
(பலருக்கு : வெள்ளையாய் இருப்பதால் இப்படி ஒரு ஐயம் உங்களுக்கு தேவை தானா?)
நான் மலையாளியா?
(உடற்பயிற்சி மையத்தில்(Gym) வேறு வேறு மூலையில் நின்று கொண்டு ஒரு மணி நேரம் கூட இருக்கும் உங்களுக்கு இது அவசியமா? என் மூக்கு எப்படி இருந்தால் என்ன?)
நான் தேவரா?
(ஒரே ஒரு இரவு தொடர்வண்டியில்(ரயிலில்) ஒன்றாக பயணித்த உங்களுக்கு இது எதற்கு? என் மீசை எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன?)
நான் வட இந்தியனா?
(குர்கானில்(Gurgaon) நான் பழக வேண்டியிருந்த பலருக்கு : மீசையை எடுத்தால் உடனே நான் வட இந்தியனா? வட இந்தியன் தென்னிந்தியன் என்ற பிரிவு எதற்கு?)
பத்து நிமிடங்கள் உரையாடுவதற்கோ, நட்பு வளர்த்துக் கொள்வதற்கோ இந்த கேள்விகள் தேவை தானா?
நான் என்னுடைய சாதியால் உயர்ந்தவனா? தாழ்ந்தவனா?
நான் பேசும் மொழியால் பெரியவனா? சிறியவனா?
நான் என்னுடைய நிறத்தால் மேல்தரமா? கீழ்த்தரமா?
நான் என் மதத்தால் நல்லவனா? கெட்டவனா?
என்னுடைய தாய்மொழி இது என்பதனால் இன்னொரு தாய்மொழியை கொண்டவனால் நான் வெறுக்கப்படவேண்டுமா?
என்னுடைய மதம் இது என்பதனால் இன்னொரு மதத்தினருக்கு நான் எதிரியாய் இருக்க வேண்டுமா?
நான் வேற்று மொழி குடியில் பிறந்திருந்தால் அந்த மொழியை நான் விரும்பியிருக்க மாட்டேனா?
ஒரு பிரிவினரை மட்டும் நான் வெறுத்தால் என் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விடுமா?
என்னுடைய குடி, குலம், இனம், மொழி தான் என்னுடைய குணங்களை தீர்மானிக்கிறதா?
என் மதத்தினர், என் சாதியினர், என் மொழி பேசுபவர்கள் மட்டும் தான் எனக்கு சொந்தமா? இந்த உலகத்திற்கே நான் சொந்தமா?
என்னை கண்டிப்பாக ஒரு குறுகிய பிரிவுக்குள் திணிக்க வேண்டுமா?
நான் ‘நானாக’ இருக்க எனக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும்?
rajeshjothi
ஜூன் 25, 2010
ஒவ்வொரு தனி மனிதனுடைய மனசாட்சியின் குரலாய் ஒலிக்கின்றது இந்த பதிவு… அருமை நண்பா… 🙂
LikeLike
balaraman
ஜூன் 25, 2010
நன்றி டா!
LikeLike
L.Asha
ஜூன் 25, 2010
super
LikeLike
balaraman
ஜூன் 25, 2010
Thanks Asha!
LikeLike
jith
ஜூன் 25, 2010
நல்லதொரு சுய சிந்தனை!!! இதே போல் அனைவரும் சிந்தித்தால் பிரச்சனைகள் குறையும்.
LikeLike
balaraman
ஜூன் 25, 2010
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!
LikeLike
Kishore Kanna S
ஜூன் 25, 2010
There is only one religion that we belong called “Human beings”
All others are illusions.
The answer for your question is if everybody takes part in love marriages.There will not be any community/caste/Religion.
Hope you got my point 😉
LikeLike
balaraman
ஜூன் 25, 2010
Though your comment looks funny, there seem to be a point in it! 😉
LikeLike
shiva
ஜூன் 25, 2010
நல்ல பதிவு .. யோசிக்கவைக்கிறது 🙂
LikeLike
balaraman
ஜூன் 25, 2010
நன்றி! ‘சிந்தனைகள்’ ஒரு நாள் ‘மாற்றங்கள்’ ஏற்படுத்தும்! 🙂
LikeLike
Uma Maheswari
ஜூன் 29, 2010
Hey its superb
LikeLike
balaraman
ஜூன் 29, 2010
Thanks Uma!
LikeLike
krpsenthil
ஜூன் 29, 2010
நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார் – நன்றி சுவாமி ஓம்கார்
LikeLike
balaraman
ஜூன் 29, 2010
வருகைக்கு நன்றி! ‘நான்’ எழுதியதை தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்! 🙂
LikeLike
Mrinzo
மே 23, 2011
You have penned Important questions youth has to ask themselves. Nice Post. This is what I came up with.
நீங்க சொன்ன மதம், சாதி, மொழி இவை மீது நாம் கொண்டுள்ள போலி உணர்வுகளை எடுத்துவிட்டால் அவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விடுதலை நம் கையில். நான் சொனது போலியான உணர்வுகளைத்தான் நம்பிக்கைகளை அல்ல. உங்களால் உங்க சாதி, மதம் அல்லது மொழியை பற்றி உணர்ச்சி இல்லாமல் சிந்திக்கவும் பேசவும் முடியுமா அவற்றை உங்களது உணர்சிகளை தாண்டி நகைசுவையாய் மாற்ற முடியுமா.
பெரும்பாலான போலி உணர்சிகள் அரசியல்வாதிகளால் அல்லது மதத்தலைவர்களால் ஊட்டபட்டதாக இருக்கும். உதாரணம் “தமிழை போல சிறந்த மொழி உலகில் இல்லை”, மொழியில் என்ன சிறந்தது தாழ்ந்தது அப்படிய சிறந்தது என்றால் அதற்க்கு என்ன? இந்த சிறப்பை தமிழ் அடைய எந்தனை மொழிகளை அது அழித்திருக்கவேண்டும் அல்லது தனக்குள் இழுத்திருக்க வேண்டும். இந்த மொழி சிறப்பு என்பதாலா அதை நான் நேசிக்கிறேன் ஒருவேளை அது சிறப்பு இல்லை என்றால் அதை வெறுப்பனா?
இந்த விருப்பு வெறுப்பிற்கு மட்டும் எதற்கு இந்தனை உணர்ச்சிகள்?
LikeLike
balaraman
மே 23, 2011
நன்றி. இப்பொழுதுள்ள இளைஞர்கள் பலர் ‘மாற்றம்’ அடைந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது. அரசியலிலும் ‘இளைஞர்கள்’ புகுந்துவிட்டால் இன்னும் நிறைய மாற்றங்கள் உண்டாகலாம்.
LikeLike
சரவணன்
மே 31, 2011
//பத்து நிமிடங்கள் உரையாடுவதற்கோ, நட்பு வளர்த்துக் கொள்வதற்கோ//
ஒரு சில நிமிடங்களுக்கே இப்படி என்றால், சமூகம் சமத்துவம் பெரும் நாளை பார்க்காமலேயே இறந்துவிடுவோமோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது, மனதுக்கு மிகவும் வேதனை தருகின்றது.
LikeLike
Balasubrahmanian Kv
ஜூலை 29, 2011
Super! Ramji!
LikeLike
Natarajan Ganesan (@Natarajan_G)
செப்ரெம்பர் 11, 2011
பல பேருடைய குமுறல்! சரியான பதிவு!
LikeLike