என் பெயர் அன்புச்செல்வன். நான் இப்பொழுது காரில் (car – தானுந்து) சென்றுகொண்டிருக்கிறேன். வெளியே நன்றாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. நாலைந்து நாட்களாகவே பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் தான் எப்பொழுதும் பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் நான் இன்று தானுந்தில் செல்கிறேன். தானுந்தில் நானும் ஓட்டுனரும் மட்டும் தான் போய்க்கொண்டிருக்கிறோம். என் மனது லேசாக படபடத்து கொண்டிருப்பதை நான் வெளியே காட்டவில்லை. “அண்ணே!, ரேடியோ(வானொலி) வால்யும(ஒலி அளவு) கொஞ்சம் கூட்டுங்க” என்று சொன்னேன் ஓட்டுனரிடம். ஒரு நல்ல காதல் பாட்டுபாடிக்கொண்டிருந்தது.
“உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே..” என்று ‘காதல் மன்னன்’ அஜீத் பாடிய பாட்டு.
2 வருடங்களுக்கு முன்பு…
நான் கல்லூரியில் சேர்ந்து, முதல் நாள் என் வகுப்புக்குள் நுழைந்தேன். என் உடன்பயில்பவர்கள் (Classmates) யாருமே எனக்கு தெரியாது. முதல் வகுப்பில் வருகைப்பதிவு (Attendance) எடுத்தபொழுது தான் நான் யாழினியை பார்த்தேன். பார்த்ததுமே கவிழ்ந்து விட்டேன். அழகான பெரிய இரண்டு கண்களும், சிறிய சிவந்த உதடுகளும், அடர்ந்த கருங்கூந்தலும், மெல்லிடையும், வெண்ணிற மேனியும், மென்மையான குரலும் என்னை சுண்டி இழுத்தது.
“இனிமே இவதாண்டா என்னோட காதலி!” என்று என் மனசுக்குள்ளேயேசொல்லிக்கொண்டேன்.
இப்பொழுது…
ஆனால் அது அவ்வளவு எளிதில்லை. கல்லூரிக்கு வந்தால் காதல் தானாக வந்துவிடும். ஆனால் அந்த பெண்ணின் மனதிற்குள் புகுவதற்கு எவ்வளவு “உழைக்க” வேண்டும் என்பது “அப்பாவி” ஆண்களுக்கு மட்டும் தான் தெரியும். கல்லூரிக்கு செல்லும் வழியில் தான் அவள் தினமும் வந்து கல்லூரி பேருந்தில் ஏறும் நிறுத்தம் உள்ளது. அங்கு சென்று அவளையும் தானுந்தில் ஏற்றிக்கொண்டு செல்வது தான் என் கனவு. அப்படி அவள் வந்துவிட்டால் இதற்கு முன்பு சொதப்பியது போலில்லாமல் இன்றே என் காதலை சொல்லி விடுவேன்.
ம்ம்ம்ம்… இன்னும் சிறிது தூரம் இருக்கிறது….
ஒரு வருடத்திற்கு முன்பு…
இந்த நேரத்திற்குள் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். அதுபோக, நானும் அவளை பற்றி நிறைய அறிந்து கொண்டேன். அவள் மென்மையானவள், நல்ல பண்புகள் கொண்டவள், வீட்டிற்கு அடங்கியவள், அமைதியானவள், மிகவும் பயந்தவள்! எல்லா விதத்திலும் எனக்கு நேர்மாறாக இருப்பதாலோ என்னவோ எனக்கு அவளை இன்னும் பிடித்தது.
அவள் பார்வை என் மீது பட வேண்டும். இதற்காகவே நான் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். அவளும் என்னை அடிக்கடி பார்ப்பாள், சிரிப்பாள். நான் எதிலும் திறமை இல்லாதவனாய் பெருத்த உடல் கொண்டு அழகற்றவனாய் இருந்தேன். அவளை கவர்வதற்காகவே வெறி கொண்டு 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்வது, உணவை குறைப்பது என்று ஒரு வழியாக உடம்பை குறைத்துவிட்டேன்! தாடி வைப்பது, மீசை எடுப்பது, ஒவ்வொரு நாளும் வேற முகத்தோற்றத்துடன் போவது என்று “கதாநாயகன்” போல ஆகிவிட்டேன். படம் வரைதல், ஆட்டம், பாட்டம் என எல்லாவற்றிலும் நாட்டம் கூடியது. அவ்வளவு ஏன் ?? கவிதையும் எழுத ஆரம்பித்து விட்டேன். விக்ரமன் படத்தில் ஒரே பாட்டில் முன்னேறுவது போல, நான் ஒரே வருடத்தில் மொத்தமாக மாறினேன். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அதிகம் உதவ ஆரம்பித்தேன். பொறுப்பாக நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன்.
யாழினிக்கு பிடிக்கும் படி மாறினேன். அவளுக்கும் என்னை பிடித்திருந்தது. என்னை ரசித்து பார்ப்பாள், சிரிப்பாள். ஆனால், என்னிடம் பேச மட்டும் தயங்குவாள்.
அது சரி.. நமக்கே இங்க உதருதே!!
இப்பொழுது…
யாழினி எப்போதும் வந்து நிற்கும் நிறுத்தம் வந்தது. நான், ஓட்டுனரிடம், ” கொஞ்சம் தள்ளி போய் அந்த மரத்துக்கிட்ட நிப்பாட்டுங்க.. ஒரு நண்பன கூட்டிட்டு போகணும்.” என்று சொன்னேன். அப்படியே நிறுத்தியாயிற்று.
இப்பொழுது எனக்கு படபடப்பு அதிகரித்தது. “காதல் மன்னன்” பாட்டை முனுமுனுத்துக்கொண்டே காத்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில், யாழினியின் அப்பா, அவளை பின்னால் உட்காரவைத்து வண்டியில் கொண்டு வந்து பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் நிழற்க்குடைக்குள்ளே இறக்கி விட்டார். அவள், அவள் அப்பாவுக்கு, “சின்ன கவுண்டர்” போல குடை பிடித்துக்கொண்டே வண்டியில் வந்ததை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. அவளை இறக்கி விட்டு, அவளின் அப்பா ஒரு மைல் கல் தொலைவு சென்ற பிறகு தான் நான் தானுந்தை விட்டு இறங்கினேன். அவளைப்போலவே ஒரு குடையை மடக்கி பிடித்த படி மழையில் நனைந்து கொண்டே அவளை நோக்கி நடந்தேன்.
அவள், அவளுடைய தோழிகளுடன் பேசி சிரித்து கொண்டிருந்தாள். என்னை கவனிக்கவில்லை. திடீரென்று அவள் பக்கம் சென்று, “யாழினி…” என்று அழைத்தேன். சற்றும் என்னை எதிர்பார்க்காத அவளின் கண்ணில் அவ்வளவு பயம் கலந்த கிளர்ச்சியை பார்த்தேன்.
இன்றாவது என் காதலை அவளிடம் சொல்லிவிடுவேன் என்று தான் நினைக்கிறேன்!!
குறிப்பு: உண்மையான தூய காதலுக்கு தோல்வியே கிடையாது. அந்த காதலை உங்கள் காதலியோ/காதலனோ ஏற்காவிட்டாலும் அந்த காதல் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றம் நிலையாக இருக்கும். அது என்றும் வாழும்!!
“காதல் தோல்வி” என்று நொந்து கொண்டிருப்பவர்கள் தயவு செய்து மாறவும். அந்த காதல் உங்களைவிட்டு எங்கும் போகாது.
M@nick@m
திசெம்பர் 28, 2009
Machi gr8 story da….
But think so its a True one…Enna kathai allla Nejaam eh..?
Yaruda antha Yalini…. solla ve illa 😉
LikeLike
balaraman
திசெம்பர் 28, 2009
நன்றி டா… இது உண்மைக்கதை என்று தான் கூற வேண்டும்.. அனால் “யாழினி” கற்பனையே!! 😉
LikeLike
M@nick@m
திசெம்பர் 28, 2009
appoluthu…yaru antha karpanai katha pathiram…
avalin unnmaiyana peyar than enna…? 😉
LikeLike
Buvana
திசெம்பர் 29, 2009
hey chance eh ille..
super ah irukku..
thiyagaraja thaane…
i will find out that yalini…:)
LikeLike
Kishore
திசெம்பர் 30, 2009
Super story da…
Enna innam konjam perusa irunda brammandama irukkum..
G8 da
LikeLike
balaraman
திசெம்பர் 30, 2009
நன்றி நண்பா… இன்னும் எழுதுனா பத்து பக்கங்களுக்கு போகும்… எல்லோரின் நலன் கருதி சுருக்கி விட்டேன்!!
LikeLike
rajeswari
திசெம்பர் 30, 2009
nice story..entha bookla padichadhu…
LikeLike
balaraman
திசெம்பர் 30, 2009
இது வரை வெளி வராத புத்தகத்தில் பதிக்கப்பட்டது… 😉
LikeLike
rajeswari
திசெம்பர் 30, 2009
Puthagathin peyar enna..
LikeLike
balaraman
திசெம்பர் 30, 2009
அதை இனிமேல் தான் நான் முடிவு செய்ய வேண்டும்!!
LikeLike
rajeswari
திசெம்பர் 30, 2009
ok..ok..no tension..romba nallairundhahu ungal kadhal ..appuram enna achu..yazhini-i parhingala
LikeLike
balaraman
திசெம்பர் 30, 2009
இது வரைக்கும் tension ஆகல..! இத்தோட நிறுத்திக்கோங்க! 😉
LikeLike
Tamil
ஜனவரி 21, 2010
Arumaiyaana padaippu!
LikeLike
gousalya
மார்ச் 24, 2010
hey, did u tell ur love 2 her r not?
LikeLike
balaraman
மார்ச் 24, 2010
Just take the “message” alone in my LOVE story! End has no meaning to that message! 🙂
LikeLike
Lakshmanakumar
ஏப்ரல் 8, 2010
இது உண்மை கதையா? உன் கதையா?
LikeLike
balaraman
ஏப்ரல் 8, 2010
அதையே ஏன் எல்லாரும் கேக்குறீங்க? “அம்மா”,”அப்பா” கதைக்கெல்லாம் கேக்கல…! 😉
LikeLike
harikrishnan
ஏப்ரல் 9, 2010
Hey after reading this story i thought of writing a story too,what u think of it buddy…….
LikeLike
balaraman
ஏப்ரல் 9, 2010
Dude, You have calibre to write better LOVE story than me…! I feel privileged to be an inspiration for you! Write soon and send me the link! 🙂
LikeLike
Balajee
பிப்ரவரி 15, 2011
good story da…….
LikeLike
balaraman
பிப்ரவரி 15, 2011
Thanks da.
LikeLike
சுந்தர்
பிப்ரவரி 15, 2011
மிக அருமையான நடை. கதை நல்ல இருந்தது. கடைசியில அந்த குறிப்பு தான் கொஞ்சம் குழப்புது. இந்த காதல் தோல்வின்னு எப்படி எடுத்துக்கறது …. அன்புச்செல்வன் தன்னுடைய காதலை இன்னும் யாழினிகிட்ட சொல்லவே இல்ல. இன்னைக்கு இல்லனா நாளைக்கு, அப்பிடியும் இல்லனா நாளை மறுநாள் அவன் தன்னோட காதல சொல்ல வாய்பிருக்கே !!! அப்பிடி இருக்கும்போது இந்த காதல் தோல்வின்னு எப்படி எடுத்துக்கறது ….
LikeLike
balaraman
பிப்ரவரி 15, 2011
கதைக்கும், குறிப்புக்கும் நடுவுல கொஞ்சம் இடைவேளை இருக்கு! அதுல எனக்கு கொஞ்சம் ‘தொடர்பு’ இருக்குறதுனால அத நான் வெளியிடல… அந்த இடைவேளை தான் உங்க குழப்பத்துக்கு காரணம்! 😉
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி! 🙂
LikeLike
rajeshjothi
பிப்ரவரி 15, 2011
//அழகான பெரிய இரண்டு கண்களும், சிறிய சிவந்த உதடுகளும், அடர்ந்த கருங்கூந்தலும், மெல்லிடையும், வெண்ணிற மேனியும், மென்மையான குரலும் என்னை சுண்டி இழுத்தது.//
முதல் பார்வையிலேயே அந்தப்புள்ளைய சாப்டிருக்கியேடா பாவி! :-)
இது உண்மைக்கதை என்று சொல்லித்தெரிவதற்கில்லை 😉 நன்று!
LikeLike
balaraman
பிப்ரவரி 16, 2011
நன்றி டா… 🙂
உண்மைகள் கலந்த பொய் இந்த கதை! 😉
LikeLike
மதுரைக்காரன்
மே 17, 2011
Nice story.. Simply say Hatsoff Bala… 🙂
LikeLike
balaraman
மே 17, 2011
நன்றி! 🙂
LikeLike
சரவணன்
ஜூலை 25, 2011
இதை படித்த பின்பு நான் நானாக இல்லையே … 🙂
LikeLike
asksukumar
ஜூலை 25, 2011
நான் இன்னைக்கு கையாண்ட இந்த யுக்தியை நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டீர்கள். அருமையான எழுத்து!
LikeLike
balaraman
ஜூலை 26, 2011
நன்றிங்க… 🙂
LikeLike
Kokilah Kanniappan
பிப்ரவரி 9, 2012
Simply superb and meaningful story 🙂 Noted!!
LikeLike
balaraman
பிப்ரவரி 9, 2012
நன்றிங்க! 🙂
LikeLike
sangeetha
பிப்ரவரி 14, 2012
thanks balaram 4 putting your words together and gifting us with such a lovely stories…toooo gud… keep rocking..all the best… :):)
LikeLike
balaraman
பிப்ரவரி 14, 2012
நன்றிங்க. 🙂
LikeLike
ponmudi
ஓகஸ்ட் 8, 2012
அன்புடன் வாழ்த்துக்கள்…
LikeLike
balaraman
ஓகஸ்ட் 9, 2012
மிக்க நன்றி. 🙂
LikeLike