ஈகையரசும் அவரது மகன் இளந்தென்றலும் சொற்கள் எதுவும் பரிமாறிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
இருவருக்கும் மோதல் ஏற்பட்டுவிடுமோ என்று படப்படத்த இளந்தென்றலின் தாய், வெண்பா, “சாப்பிடவாங்க..” என்று திசைதிருப்பினாள். ஆனால், வெண்பா நினைத்த திசையில் திரும்பவில்லை. “நான் இன்னும் என்ன செய்யனும்னு நினைக்குறீங்க… எனக்கு புரியல..” என்றான் இளந்தென்றல். அதற்கு அவன் அப்பா,”நீ என்ன செஞ்சுட்ட பெருசா?”என்றார். அதற்கு தென்றல்,”ஏன்.. நான் டூயல் ப்ளேஸ்மண்ட் (இரட்டைபணியமர்த்தம்) வாங்கியிருக்கேன்…ரெண்டு தடவ கேட்( GATE) எக்ஸாம் க்ளியர்(தேர்வாகுதல்) பண்ணியிருக்கேன்… ஐ.ஐ.டிலயும், ஐ.ஐ.எஸ்.சிலயும் (IIT & IISC) இண்டர்வியு(நேர்முகத்தேர்வு) அட்டெண்ட் பண்ணியிருக்கேன்..இதெல்லாம் உங்களுக்கு பெருசா தெரியாதே?” என்று புயலாய் மாறினான். அதற்கு ஈகையரசு,”என்ன அவுட்புட்(பயன்,விளைவு) கிடைச்சுச்சு? இன்னும் கம்பனில இருந்து ஆர்டர்(கட்டளை) வரல.. ஐ.ஐ.டிலயும், ஐ.ஐ.எஸ்.சி’லயும் கிடைக்கல… இதுவரைக்கும் பெருசா எதாவது சாதுச்சிருக்கயா?” என்று வினவினார். கோபம் கொண்டதென்றல், “இதெல்லாம் நான் செஞ்சனால ஒங்களுக்கு பெருசாத்தெரில… பக்கத்து வீட்டுப்பையன் செஞ்சிருந்தாஅவனபத்தி பெருமயா ஏண்டயே வந்து சொல்லியிருப்பீங்க…” என்று கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றான்.
தாய், வெண்பா,”டேய்! எங்கடாபோற? சாப்டுபோடா..” என்று கூவியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக வெளியே சென்றான் தென்றல்.
மனதில் இருக்கும் கோபத்தை – தாழ்வுமனப்பான்மையை – வாய் பேசமுடியாத சுவர்களிடம் காட்டினான். அமைதியான சுற்றுசூழல், அசைந்தாடும் தென்னைமரங்கள், வரப்போகும் மழைக்கு முன்னோடியாய் வந்து நிற்கும் வானவில்அவன் மனதை அமைதிப்படுத்தியது.
கோபத்தையெல்லாம் வெளியே கொட்டிய தென்றல் வீட்டிற்கு வந்தான். வீட்டுவாசலில் இருந்த புதுக்காலணிகள் அவனுக்கு உறவினர்கள் வரவை உணர்த்தியது. கதவை திறந்து உள்ளே சென்றான். அவனது அப்பாவும், மாமாவும் கையில் காபி டம்பிளரோடு(குவளை) பேசிக்கொண்டிருந்தனர். தென்றலின் மாமா அவனிடம்,” இப்ப என்னடா பண்ற?” என்று கேட்டார். “ப்ளேஸ் ஆயிருக்கேன் மாமா.. இன்னும் டேட் வரல… அதுக்கு தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.” என்றான் தென்றல்.
உடனே ஈகையரசு,”அவன் ரெண்டு கம்பெனில பிளேஸ் ஆயிருக்கான்.. ரெண்டும் பெரிய கம்பெனி.. அதுபோக அவன் கேட் எக்ஸாம் ரெண்டு தடவ எழுதினான்.. ரெண்டுதடவையும் 90க்கு மேல எடுத்து க்ளியர் பண்ணான்.. பெரிய இன்ஸ்டிடியூசன்ல (கல்விக்கூடம்) எல்லாம் இண்டெர்வியு அட்டெண்ட் பண்ணான்.. அங்கயும் டெஸ்ட் க்ளியர் பண்ணிதான் இண்டெர்வியு போனான்… ரிஸல்ட்சுல(முடிவுகள்) கொஞ்சம் ஏமாத்திட்டாங்க.. இல்லன்னா இவனுக்கு உறுதியா கிடச்சுருக்கும்.. இப்ப ஆஃப்-கேம்பஸ்(கல்லூரிதொடர்பில்லாமல்) இண்டெர்வியு அட்டெண்ட் பண்றதா சொல்லிட்டு இருக்கான்.. பாப்போம்.. அவனும் அவன்னால முடிஞ்சதெல்லாம் செஞ்சுட்டுதான் இருக்கான்..” என்று தென்றலின் மாமாவிடம் அடுக்கினார்.
தன்முன் குறைத்துக்கூறுவதயும், பிறரிடம் பெருமையாகக்கூறுவதையும் பார்த்த தென்றலுக்கு அவன் தந்தையை பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை. அது அப்பாக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை! மகன்களுக்கு எளிதில் புரியாது!!
தொடர்புடைய கதைகள்:
Karthick
ஜூலை 6, 2009
Nice flow…so, this was the reason you were not in the house when I called you on that day…:P
LikeLike
balaraman
ஜூலை 7, 2009
Yeah.. It happens in my life.. But i understand him…
LikeLike
Lakshmanakumar
ஏப்ரல் 8, 2010
its really true balaraama.. fathers are really great.
LikeLike
Janakiraman
ஜூலை 7, 2009
real and nice story..pls forward the link whenever u publish a new one
LikeLike
Guru
ஓகஸ்ட் 6, 2009
Good flow of words and thoughts! Enjoyed it!!
LikeLike
Balaraman
ஓகஸ்ட் 6, 2009
Thank you.. ready to provide you more treat..
LikeLike
Sharavana
ஓகஸ்ட் 15, 2009
i too hav come across such situation. finish lines r really true.
LikeLike
Gayathiri
ஓகஸ்ட் 20, 2009
am really moved.. tears stand in my eyes.. gr8 bro
LikeLike
Balaraman
ஓகஸ்ட் 20, 2009
Keep your tears inside heart and serve your father..
LikeLike
Christella Jone
நவம்பர் 18, 2009
you ve written the reality…
idhu kadhai alla ellar veetilum nadakum nijam…
LikeLike
vasuki
நவம்பர் 23, 2009
Hi,
Its nice.i know, it is your story,bec your dad told me about u like this……
LikeLike
Manion.Ramasamy
ஜூன் 20, 2011
என் கண்கள் பனித்தன! என் தந்தையின் நினைவுகளில்!
LikeLike
balaraman
ஜூன் 21, 2011
நல்லது! 🙂
LikeLike
rajeshjothi
ஜூன் 17, 2012
நல்லா இருக்கு 🙂
LikeLike
balaraman
ஜூன் 17, 2012
நன்றிடா! 🙂
LikeLike
திண்டுக்கல் தனபாலன்
ஜூன் 26, 2013
வணக்கம்…
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_26.html) சென்று பார்க்கவும்… நன்றி…
LikeLike
balaraman
ஜூன் 26, 2013
வணக்கம் நண்பரே. நல்ல செய்தி சொன்னீர்கள். மகிழ்ச்சி. நன்றி.
LikeLike