தமிழோடு விளையாடுவோம் – 1

Posted on ஜூன் 26, 2009

22


 அந்தாதி விளையாட்டு :

இதில் நீங்கள் ஈரெழுத்துச் சொற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அந்த சொல் முடியும் எழுத்தில் இன்னொரு சொல் தொடங்கி அடுக்காக போகவும்.

 (எடுத்துக்காட்டு) சேமிமிவிவிதிதிகைகைதிதிசுசுவை

 

விதிமுறைகள்:

 *ஒரு முறை பயன்படுத்திய சொல்லை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. 

*சுட்டும் பெயர்ச்சொல்லை பயன்படுத்தக் கூடாது.

(எ.கா) மைனா,காசி,தோசை

*பேச்சுவழக்கு சொல்லையும், வட்டாரச் சொல்லையும் தவிர்க்கவும்.

(எ.கா) தல,மாமு,மிசா
*சுருக்கச் சொல்லை பயன்படுத்தக் கூடாது.
(எ.கா) கி.பி,கி.மு,.கா
  

 மதிப்பெண்கள் :

7 சொற்களுக்கு மேல் : சொல் வித்தகன்!!!
5-7 சொற்கள் : நல்ல முயற்சி!!
0-4 சொற்கள் : வேற விளையாட்டை விளையாடவும்!
ஒன்றுக்குள் மூன்றுபுதிர்:
 தமிழிலுள்ள பொருள் தரும் மூன்ரெழுத்துச் சொல். அதில் எந்த ஒரு எழுத்தை நீக்கினாலும் மீதி இருக்கும் இரண்டு எழுத்துக்களும் வரிசை எதுவும் மாற்றாமலே பொருள் தரும் சொல்லாக அமையும். அது என்ன சொல்?
 
(.கா)பசுமைஎன்ற சொல்லில் எடுத்தால் சுமை‘, ‘மைஎடுத்தால் பசுஎன்று பொருள் தருகிறது. ஆனால் சுஎடுத்தால் பமைபொருள் தரவில்லை. ஆனால் அதுவும் பொருள் தர வேண்டும்.