தொடக்கமும் தெரியாது முடிவும் கிடையாது என்றும்
ஓயாது குறையும் பொங்கும் சமயங்களில் நம்மை
உள்ளே இழுத்துவிடும் வளம் கொழிக்கும் தமிழ்நாட்டில்
கடலலைகளும் பங்குச்சந்தை நிலவரமும் தொலைக்காட்சி
நெடுந்தொடர்களும் ஒன்றே
—————–
இந்தப் புதுச் சிலேடையைப்(!) படித்தவுடன் நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் இந்த ‘வெண்பாமை*’ இயற்றினார்:
தொடக்கமும் காணா தொலைமுடிவும் காணா
அடக்கமும் இன்றியே பொங்குமே – நடுக்கமாய்ப்
பங்கிடும் சந்தையும், பாழ்தொலைக் காட்சியும்
முங்கிடும் கடலே காண்!
—————————
இந்தப் பாடலின் கருத்துக்கு ‘வெண்பா’ வடிவம் கொடுத்தார் இலவசக்கொத்தனார். நன்றி.
என்றுமே ஈர்த்திடும் ஏறி இறங்கிடும்
தன்னை மறந்தே தடுமாறப் பண்ணிடும்
பொங்கும் கடலும் புரியாத பங்குமா
அன்புடை நெஞ்சே யது
*வெண்பாம் – ஆங்காங்கே சிறிது தளை தட்டக்கூடிய வெண்பா!
lakshmi narayanan
ஜூன் 25, 2009
its good da
LikeLike
Raja Ashok
ஓகஸ்ட் 25, 2009
very nice…. different attempt..
LikeLike
balaraman
ஓகஸ்ட் 30, 2009
Commonalities between sea waves, share market,telivision serials are
* we dont know starting
*we dont know ending
*It will not take rest
*It will decrease
*increase
*Sometimes,we will fall inside it
This is the meaning of this blog.
LikeLike
@gpradeesh
ஏப்ரல் 26, 2011
Good attempt! kaalamekam effect??
LikeLike
balaraman
ஏப்ரல் 26, 2011
நன்றிங்க… ஆமாங்க, காளமேகர் போல முயற்சித்தேன்! 🙂
LikeLike
Kannabiran Ravi Shankar (KRS)
திசெம்பர் 14, 2011
புதிய முயற்சி! புதுக் கவிதை மாதிரி புதுச் சிலேடை?:) நன்று!
LikeLike
Kannabiran Ravi Shankar (KRS)
திசெம்பர் 14, 2011
தொடக்கமும் காணா தொலைமுடிவும் காணா
அடக்கமும் இன்றியே பொங்குமே – நடுக்கமாய்ப்
பங்கிடும் சந்தையும், பாழ்தொலைக் காட்சியும்
முங்கிடும் கடலே காண்!
:))
சும்மா…தளையெல்லாம் தட்டுச்சின்னா, தளையை வெட்டிருங்க:))
LikeLike
balaraman
திசெம்பர் 14, 2011
மிகவும் அருமை! பார்த்த கணத்தில் ஒரு ‘வெண்பாம்’ படைத்துவிட்டீரே?!!! பாராட்டுகளுக்கு நன்றி.
LikeLike
இலவசக்கொத்தனார்
திசெம்பர் 14, 2011
பங்குச் சந்தையில் கொஞ்சம் பணம் பண்ணலாம். கடலலையில் கால் நனைக்கலாம். இதுங்க கூட எதுக்கு தொல்லைக்காட்சி! அதனால அதை எடுத்துட்டேன். ஆனா இந்த மாதிரி பூரிச்சுப் போய் நம்மை அவஸ்தைப் பட வைக்கற முக்கியமான் ஒண்ணை விட்டுட்டீங்களே!
என்றுமே ஈர்த்திடும் ஏறி இறங்கிடும்
தன்னை மறந்தே தடுமாறப் பண்ணிடும்
பொங்கும் கடலும் புரியாத பங்குமா
அன்புடை நெஞ்சே யது
LikeLike
balaraman
திசெம்பர் 14, 2011
கருத்துக்கும் வெண்பாவுக்கும் நன்றிங்க! என் கருத்தையே வெண்பாவாகப் படிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் வெண்பா வடிவம் தான் அழகு! நன்றிங்க.
LikeLike
இலவசக்கொத்தனார்
திசெம்பர் 19, 2011
இப்போதான் பார்க்கறேன். அது என்ன தலைப்பில் சங்குச்சந்தையும்ன்னு பேர் வெச்சு இருக்கீங்க? கடல் என்பதால் சங்குச் சந்தையா? 🙂
LikeLike
balaraman
திசெம்பர் 20, 2011
தொ(ல்)லைக்காட்சியை கவனித்தீர்களா?! பங்குச்சந்தை பலநேரங்களில் கவிழ்த்துவிடுவதால் ‘சங்குச்சந்தை’! 🙂
LikeLike